மதுரை: தமிழகத்தில் மேலும், 11 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்குவது பரிசீலனையில் உள்ளது, என கேந்திரிய வித்யாலயா சங்கதன், சென்னை மண்டல துணை கமிஷனர் மணி தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: சென்னை மண்டலத்தில்,
புதுச்சேரி உட்பட, 50, கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. தற்போது, வெளியான பிளஸ் 2
தேர்வில், ஐ.சி.எஸ்.இ., - என்.சி.இ.ஆர்.டி., பாடப்பிரிவு பள்ளி களை விட கே.வி.,
பள்ளிகள் அதிகபட்சம், 97.78 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளன.
தற்போது, &'டர்ணோத்ஷவா&' என்ற திட்டம், 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பிளஸ் 1 செல்லும் முன் மொழி,
விளையாட்டு, யோகா, கவுன்சிலிங், சேவை உள்ளிட்ட திறன் பயிற்சிகள்
அளிக்கப்படும்.மதுரை உட்பட சில இடங்களில், 11 கே.வி., பள்ளிகள் துவங்க,
பரிசீலிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.