மறுகூட்டல் விண்ணப்ப தேதி மாற்றம் | Kalvimalar - News

மறுகூட்டல் விண்ணப்ப தேதி மாற்றம்மே 25,2018,10:15 IST

எழுத்தின் அளவு :

சென்னை : மூன்று மாவட்டங்களில், பத்தாம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: துாத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், இணையதள சேவை நிறுத்தம் மற்றும், 144 தடையுத்தரவு காரணமாக, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி மாற்றப்படுகிறது.

இந்த மாவட்டங்களுக்கு மட்டும், இயல்பு நிலை திரும்பியதும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, மூன்று நாட்கள் அவகாசம் தரப்படும். எனவே, மாணவர்களும், பெற்றோரும் பதற்றம் அடைய வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us