சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லையில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகள், எம்.எல்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
விண்ணப்பப் படிவம் நவ., 28 முதல் இந்த சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் டிச.,12. விருப்பமுள்ளோர், படிவத்தை நேரிலோ அல்லது தபாலிலோ பெற்று அத்துடன்( எஸ்.சி/எஸ்.டி., 250, மற்றவர் 500) ரூபாய்க்கான டிடி மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம், வேலைநாட்களில் காலை 11 முதல் மாலை 4 வரை வழங்கப்படுகின்றன.