கடலூர்: தேசிய புத்தாக்கத் திறன் நிறுவனம் நடத்தும் தொழில் நுட்ப யோசனைகளுக்கான போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை ஆக. 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சியுடன் செயல்படும் அகமதாபாத் தேசிய புத்தாக்கத் திறன் நிறுவனம், பள்ளி மாணவர்களின் சுயமான தொழில் நுட்ப யோசனைகளுக்கான போட்டியை நடத்துகிறது.
இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை ஆக. 31ம் தேதிக்குள் தேசிய புத்தாக்க நிறுவனம், ஸ்டேட்டி லைட் காம்ப் ளக்ஸ், அகமதாபாத்-380 015, குஜராத் மாநிலம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் வயது, பயிலும் வகுப்பு, பள்ளியின் பெயர் மற்றும் முகவரி, வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். போட்டி முடிவுகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்படும். விருதுகள் பின்னர் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.