அண்ணா பல்கலை கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் காலியில்லை! | Kalvimalar - News

அண்ணா பல்கலை கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் காலியில்லை!ஜூலை 05,2015,09:22 IST

எழுத்தின் அளவு :

அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகளில், முக்கிய பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் இல்லை.

ஆனால், பிற மாவட்ட அரசு இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன.


இரண்டு லட்சம் இடங்களை நிரப்புவதற்கான, இன்ஜி., பொது கவுன்சிலிங், கடந்த 1ம் தேதி துவங்கியது. முதல் நாளில் இருந்தே மாணவர்கள், அண்ணா பல்கலையின் மூன்று கல்லுாரிகளை தேர்வு செய்து வந்தனர். இதில், விரைவாக நிரம்பும் முக்கியப் பாடப்பிரிவுகளின் பட்டியலில், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் (இ.சி.இ.,), முதலிடத்தில் உள்ளது.


அடுத்தடுத்த இடங்களில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் (இ.இ.இ.,), கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் சிவில் போன்ற படிப்புகள் இடம் பெற்றுள்ளன.


மூன்றாம் நாள் நிலவரப்படி, மேற்கண்ட முக்கிய பாடங்களில், அண்ணா பல்கலை கல்லுாரிகளான, கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக்கல்லுாரிகளில், பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன


கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி, மதுரை தியாகராஜர் கல்லுாரி, கோவை, சேலம் அரசு இன்ஜி., கல்லுாரி, சென்னை ஸ்ரீவெங்கடேஸ்வரா காலேஜ் ஆப் இன்ஜி., சிவசுப்ரமணிய நாடார் இன்ஜி., கல்லுாரி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, குமரகுரு இன்ஜி., கல்லுாரி உள்ளிட்ட கல்லுாரிகளில், முக்கிய பாடப்பிரிவுகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வேகமாக நிரம்பி, மிகவும் குறைந்த இடங்களே காலியாக உள்ளன.


தமிழுக்கு மவுசு இல்லை!


அண்ணா பல்கலையின் கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகள் உள்ளிட்டவற்றிலுள்ள, மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப்பிரிவில், தமிழ்வழி படிப்புகளுக்கு, ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், ஐந்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்.


பெரும்பாலான மாணவர்கள், தமிழ்வழிக்கு ஆர்வம் காட்டவில்லை. இதுகுறித்து, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கூறும் போது, தமிழ் வழியில் படித்தால், சான்றிதழில் தமிழ் என்று நாங்கள் குறிப்பிடுவதில்லை. ஆனாலும், மாணவர்கள் தமிழ்வழி பாடப்பிரிவை எடுக்கத் தயங்குகின்றனர் என்றனர்.


Advertisement

வாசகர் கருத்து

அதற்கு காரணம் பேச்சு வழக்கில் பாடம் இல்லாததே... முடுக்கம், கிடுக்கம் என்று இருந்தால் யாருக்கு புரியும்...
by வெங்காய.நாயுடு,India    2015-07-05 13:02:39 13:02:39 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us