மும்பை : பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு அதிகப்படியான புத்தக சுமை காரணமாக எலும்பு நோய் பாதிப்பு ஏற்படுவதாக மகாராஷ்டிரா கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில்
இது குறிப்பிடப்பட்டுள்ளது. 10 வயதிற்கு உட்பட்ட 58 சதவீதம் குழந்தைகளுக்கு எலும்பு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக
குறிப்பிட்டுள்ளது தொடர்பாக ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.