உயர்நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு தேர்வானோரின் பட்டியலை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி. | Kalvimalar - News

உயர்நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு தேர்வானோரின் பட்டியலை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி.டிசம்பர் 17,2014,11:15 IST

எழுத்தின் அளவு :

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள, நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பு: சென்னை உயர்நீதிமன்ற பணிகளில் காலியாக உள்ள, நீதிபதி நேர்முக உதவியாளர் 57; நேர்முக உதவியாளர் 7; உதவியாளர் 37; கணினி இயக்குபவர் 28 மற்றும் தட்டச்சர் 139 என, 268 பணியிடங்களுக்கு, கடந்த பிப்., 23ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது.

இத்தேர்வில், 27,983 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு விதியின் அடிப்படையில், நீதிபதி நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கான, திறனறி தேர்வுக்கு, ஒரு பதவிக்கு, 20 பேர் என்ற விகித அடிப்படையில், 3,631 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், நீதிபதி நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட, 221 விண்ணப்பதாரர் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் ஜன., 5ம் தேதியும், நேர்காணல், ஜன., 6, 7 மற்றும் 8ம் தேதிகளிலும், தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும். தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல், பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us