பொதுத்தேர்வு தேர்ச்சியை 90லிருந்து 95 சதவீதமாக அதிகரிக்க அமைச்சர் உத்தரவு | Kalvimalar - News

பொதுத்தேர்வு தேர்ச்சியை 90லிருந்து 95 சதவீதமாக அதிகரிக்க அமைச்சர் உத்தரவுநவம்பர் 26,2014,11:32 IST

எழுத்தின் அளவு :

விருதுநகர்: 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவர்களின் மாநில அளவிலான தேர்ச்சியை 90ல் இருந்து 95 சதவீதமாக அதிகரிக்க, அதிகாரிகளுக்கு, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் அமைச்சர் வீரமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா, இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "அடுத்தாண்டு நடக்கும் 10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை மாநில அளவில் 90ல் இருந்து 95 ஆக உயர்த்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக தலைமையாசிரியர்கள் மூலம் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம் வழங்கப்பட்டு சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளது. 6,7,8,9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் எழுதும் திறன், பேசும் திறன், அடிப்படை கணிதத்தை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

Advertisement

வாசகர் கருத்து

6 முதல் 8 வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற கல்வி முறையை ஒழித்தால்தான், கல்வி அமைச்சர் சொல்லும் தேர்ச்சி விகிதத்தை 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில் பெற முடியும். அமைச்சர் ஆவன செய்வாரா?
by நா. இரத்தினம்,India    2014-11-26 18:59:57 18:59:57 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us