மதுரை: பள்ளி ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.
மதுரையில் இதன் பொதுக் குழுக் கூட்டம் மாநில தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. ஆசிரியர்கள் மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை அரசு ஏற்படுத்த வேண்டும்.
சென்னையில் ஆசிரியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.