அமெரிக்காவைச் சேர்ந்த நார்த் சவுத் பவுண்டேஷன் (என்.எஸ்.எப்.,) பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள இளநிலை பட்டம் பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்காக உதவித்தொகைகளை வழங்குகிறது.
நார்த் சவுத் பௌண்டேஷன்
அமெரிக்கவாழ் இந்திய வம்சாவளிகளுக்கு ‘ஸ்பெல்லிங் பி’, ‘வக்காபிலரி பி’, ‘ஜியோகிராபி பி’ போன்ற போட்டிகள் நடத்தி, அதில் திரட்டப்படும் நிதியை உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குகிறது, நார்த் சவுத் பவுண்டேஷன்.
படிப்புகள்:
இளநிலை - மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், நர்சிங்.
டிப்ளமா - பொறியியல் மற்றும் வேளாண்மை
ஸ்காலர்ஷிப் எண்ணிக்கை:
ஆயிரத்திற்கும் அதிகமான தகுதியான மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
10ம், 12ம் வகுப்பு மற்றும் சி.இ.டி.,/ஜே.இ.டி., போன்ற நுழைவுத்தேர்வு தரவரிசை பட்டியலில் முதல் 10 சதவீதத்திற்குள்ளான இடத்தை பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரசு அங்கிகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்றிருப்பது அவசியம். வேறு எந்த உதவித்தொகை திட்டத்திற்கும் தேர்வாகியிருக்கக் கூடாது. குறிப்பாகக் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. மேலும், பட்டப்படிப்பு படிக்கும் காலங்களிலும் வருகின்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டியது முக்கியம்.
உதவித்தொகை:
மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டிற்கு 25,000 ரூபாய்
பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 20,000 ரூபாய்
பல் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டிற்கு 20,000 ரூபாய்
நர்ஸிக் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8,000 ரூபாய்
பொறியியல் டிப்ளமா மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8,000 ரூபாய்
வேளாண் டிப்ளமா மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8,000 ரூபாய்
தேர்வு முறை:
மாணவர்களின் மதிப்பெண் மற்றும் குடும்பத்தின் பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே தேர்வு முறை இருக்கும். குறிப்பாக அரசுப் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் தரவரிசை பட்டியலில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இறுதியாக, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
என்.எஸ்.எப்., உதவித்தொகைக்கான அதிகாரப்பூர்வ இணையத்தளம் வாயிலாக, மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.
விபரங்களுக்கு: