சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளுக்கு, கிரைண்டர் வழங்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான 1,305 விடுதிகள் உள்ளன. இவ்விடுதிகளில், 81,164 மாணவ, மாணவியர், எவ்வித கட்டணமும் இல்லாமல், தங்கி படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவும், ஐந்து நாட்கள், வேக வைத்த முட்டையும் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு இட்லி வழங்குவதற்காக, கடந்த ஆண்டு 50 விடுதிகளுக்கு 6.25 லட்சம் ரூபாய் செலவில் மாவரைக்கும் இயந்திரம்(கிரைண்டர்) வழங்கப்பட்டது.
நடப்பாண்டு, 642 விடுதிகளுக்கு கிரைண்டர் வழங்கப்பட உள்ளது. இவற்றை கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.