டிப்ளமோ நர்சிங் கலந்தாய்வு: முதல் நாளில் 420 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு | Kalvimalar - News

டிப்ளமோ நர்சிங் கலந்தாய்வு: முதல் நாளில் 420 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடுசெப்டம்பர் 16,2014,13:43 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தில், ’டிப்ளமோ நர்சிங்’ படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வின், முதல் நாளில், 420 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

தமிழகத்தில், 23 நர்சிங் கல்லூரிகளில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புகளுக்கு, 2,000 இடங்கள் உள்ளன; 8,101 பேர் போட்டியில் உள்ளனர்.

இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், நேற்று தொடங்கியது. காலை, சிறப்பு பிரிவினருக்கும், மதியம், மற்ற பிரிவினருக்கும் கலந்தாய்வு நடந்தது. அழைக்கப்பட்ட, 580 பேரில், 500 பேர் வரை பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவில், மொத்தம், 48 பேர் ஒதுக்கீடு பெற்றனர். முதல் நாள் கலந்தாய்வு முடிவில், மொத்தம், 420 பேர் ஒதுக்கீடு பெற்றனர்.மீதம், 1,580 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, இம்மாதம், 18ம் தேதி வரை நடக்கிறது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us