விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தத்கல் திட்டத்தில் செப்., 1, 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் | Kalvimalar - News

விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தத்கல் திட்டத்தில் செப்., 1, 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்ஆகஸ்ட் 28,2014,13:05 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், செப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு, செப்டம்பர், அக்டோபரில் நடக்கிறது. இதற்கு, மாணவர் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், சம்பந்தபட்ட மையங்களுக்கு, செப்., 1 மற்றும் 2ம் தேதியில், நேரில் சென்று, பதிவு செய்யலாம்.

சிறப்பு மையங்கள் விவரத்தை www.tndge.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், சென்னையில் மட்டும் தேர்வு மையம் அமைக்கப்படும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us