சென்னை: பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், செப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு, செப்டம்பர், அக்டோபரில் நடக்கிறது. இதற்கு, மாணவர் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், சம்பந்தபட்ட மையங்களுக்கு, செப்., 1 மற்றும் 2ம் தேதியில், நேரில் சென்று, பதிவு செய்யலாம்.
சிறப்பு மையங்கள் விவரத்தை www.tndge.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், சென்னையில் மட்டும் தேர்வு மையம் அமைக்கப்படும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.