சென்னை: பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.இ., படிப்பில் சேர, வரும், 5ம் தேதி, அண்ணா பல்கலையில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவர்களுக்கு ஆக., 6ம் தேதி துணை கலந்தாய்வு நடக்கிறது. பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 4ம் தேதியுடன் முடிகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.இ., படிப்பில் சேர வரும் 5ம் தேதி அண்ணா பல்கலையில், நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களுக்கு, மறுநாள் 6ம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும் எனவும், அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.