மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் லேப்-டாப் வழங்கும் விழா | Kalvimalar - News

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் லேப்-டாப் வழங்கும் விழாஜூலை 31,2014,12:12 IST

எழுத்தின் அளவு :

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் லேப்-டாப் வழங்கும் விழா நடந்தது.

மாவட்ட திட்ட இயக்குனர் ராதா தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி எம்.பி., டாக்டர் காமராஜ், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர் தனமணி, ஒன்றிய சேர்மன் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி கண்ணாயிரம் வரவேற்றார்.

அமைச்சர் மோகன் கலந்து கொண்டு, 120 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களையும், 80 பேருக்கு லேப்-டாப்களையும் வழங்கி பேசினார். ஒன்றிய துணை சேர்மன் திருமால், ஊராட்சி மன்ற துணை தலைவர் சின்னபிள்ளை சேட்டு, கூட் டுறவு வங்கி தலைவர்கள் குசேலன், மணிமாறன், கோவிந்தராஜ், மேலப்பட்டு ராஜேந்திரன், பி.,டி.ஓ.,க்கள் பொன்னம்பலம், கல்யாணசுந்தரம், தாசில்தார் மணிவண்ணன் கலந்து கொண்டனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us