சேவையாற்றும் இளைஞர்களுக்கு முதல்வர் மாநில இளைஞர் விருது: ஜெயலலிதா | Kalvimalar - News

சேவையாற்றும் இளைஞர்களுக்கு முதல்வர் மாநில இளைஞர் விருது: ஜெயலலிதாஜூலை 31,2014,10:31 IST

எழுத்தின் அளவு :

சென்னை: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு, முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில், 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: திருச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வளாகங்கள், தலா 80 லட்சம் ரூபாயில் பராமரிப்பு செய்யப்படும்.

23 மாவட்டங்களில் உள்ள நீச்சல் குளங்கள் 3 கோடி ரூபாயில் புனரமைக்கப்படும். நீச்சல் குளங்களில் நிறுவப்பட்டுள்ள வடிகட்டும் நிலையங்கள் ஓசோன் சுத்திகரிப்புடன் கூடிய, வடிகட்டும் நிலையங்களாக மாற்றப்படும். இதற்கு, 15-75 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், "முதல்வர் மாநில இளைஞர் விருது" உருவாக்கப்படும்.

15 - 35 வயதுடைய மூன்று ஆண்கள், மூன்று பெண்களுக்கு சுதந்திர தினத்தன்று இவ்விருது வழங்கப்படும். 5,000 ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம், பதக்கத்தை உள்ளடக்கியதாக விருது இருக்கும்.

சென்னை, மேலக்கோட்டையூர் விளையாட்டு பல்கலைக்கு 18.03 கோடி ரூபாயில் நூலகம், ஆய்வுக் கூடம், கூட்ட அரங்கம், பல்நோக்கு விளையாட்டு அரங்கம் ஆகியவை கட்டப்படும். 2 கி.மீட்டருக்கு உள்வட்ட இணைப்பு சாலை அமைக்கப்படும்.

இளைஞர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், தேசிய அளவில் பங்காற்றும் வகையிலும், தமிழகத்தின் இளைஞர் கொள்கை வகுக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார்.

Advertisement

வாசகர் கருத்து

வரவேற்க்கத்தக்க திட்டம், இதனால் பொதுமக்களின் சேவை அதிகரிக்கும். ஆனால் இதில் அரசியல் கலக்காமல் பாரபட்சமின்றி விருதுகள் வழங்கப்பட வேண்டும்.
by nalavirumpi,Oman    2014-07-31 13:31:15 13:31:15 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us