சென்னை: பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்கில், இதுவரை ஒதுக்கீடு பெற்ற 81,083 பேரில், 47,103 பேர் ஆண்கள் மற்றும் 33,980 பேர் பெண்கள்.
மொத்த எண்ணிக்கையான 81,083 பேரில், முதல் தலைமுறை பட்டதாரிகள் மட்டும் 43,559 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பாடப்பிரிவுகளையும் சேர்த்து, ஜுலை 28 நிலவரப்படியான பொறியியல் இடங்கள் 2,04,079.
இவற்றில், இதுவரை 39.73% இடங்கள் நிரம்பியுள்ளன. மாணவர்கள் அதிகம் தேர்வு செய்ததில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் மற்றும் சிவில் இன்ஜினியரிங் ஆகிய பாடங்கள் முறையே, முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றன.
நான்காவது இடத்தில் கணிப்பொறி அறிவியல் பாடம் வருகிறது. ஐந்தாவது இடத்தில், எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்பும், ஆறாவது இடத்தில் ஐ.டி. படிப்பும் வருகிறது.
முக்கியப் பாடங்கள் தவிர்த்த இதர பாடப்பிரிவுகளை இதுவரை மொத்தம் 5,106 பேர் தேர்வு செய்துள்ளனர். தமிழ் வழியில் வழங்கப்படும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் 147 பேரும், சிவில் படிப்பில் 187 பேரும் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
தமிழ் வழி சிவில் படிப்பை அதிகளவாக 111 பெண்கள் தேர்வு செய்துள்ளனர். அதேசமயம் மெக்கானிக்கல் படிப்பை 14 பெண்கள் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.
இதுல என்ன சந்தேகம் ?? இன்ஜினியரிங்ல வேலை வாய்ப்பு குறைவுன்னு படிச்ச குடும்பத்துக்கு தெரியாதா என்ன ??? Trend மாறிப்போச்சு...
|
by கவின்,India 2014-07-31 07:35:38 07:35:38 IST |
நம் நாட்டில் ஜாதி சான்றிதழும் முதல் பட்டதாரி சான்றிதழும் என்ன கஷ்டமா - ஊழல் நிறைந்த நாட்டில் இங்கு உண்மைக்கு இடம் இல்லை - பாவம் = உருபடாது - ஜெய் ஹிந்த்.
|
by ரவி ,India 2014-07-30 13:34:43 13:34:43 IST |