சாலை விழிப்புணர்வு: பள்ளிக் குழந்தைகளுக்காக காமிக் புத்தகம் வெளியிட ஏற்பாடு | Kalvimalar - News

சாலை விழிப்புணர்வு: பள்ளிக் குழந்தைகளுக்காக காமிக் புத்தகம் வெளியிட ஏற்பாடுஜூலை 23,2014,13:00 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பள்ளிக் குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியன் ரோடு காங்கிரஸ் ஐ.ஆர்.சி. சார்பில் இலவச காமிக் புத்தகம் வரும் 25ம் தேதி வெளியிடப்படுகிறது.

பள்ளிக் குழந்தைகள் மத்தியில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் எதிர்காலத்தில் வெளிநாடுகளைப் போல் போக்குவரத்து கட்டுப்பாடுகளை இந்தியாவில் அமல்படுத்த முடியும். இதை கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதற்குமான சாலை விதிகளை வகுத்தளித்துள்ள ஐ.ஆர்.சி. முடிவு செய்துள்ளது.

இதற்காக சாலை பாதுகாப்பு விதிகள் விழிப்புணர்வு அடங்கிய புத்தகத்தை தயாரித்துள்ளது. ஒன்பது முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு இப்புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இம்மாதம் 25ம் தேதி சி.ஐ.டி. நகர், சென்னை மாநகராட்சிப் பள்ளியில், இந்த புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது.

ஐ.ஆர்.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், "குழந்தைகள் மனதில் எளிதாக பதியும் வகையில் மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம் காமிக்ஸ் வடிவில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

வாசகர் கருத்து

மிகவும் அருமையான கருத்து. இன்று நான் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் டிராபிக் ரூல்ஸ் பற்றி பேசுவதாக நேற்று கூறினேன்.. சாலை பாதுகாப்பு விதிகள் விழிப்புணர்வு அடங்கிய புத்தகத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்..
by பிரவீன்,India    2014-07-23 13:59:10 13:59:10 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us