10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கும் திட்டம்? | Kalvimalar - News

10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கும் திட்டம்?ஏப்ரல் 19,2014,15:12 IST

எழுத்தின் அளவு :

சென்னை: "பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் அமலில் உள்ள விடைத்தாள் நகல் வழங்கும் திட்டத்தை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்" என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியீட்டிற்குப் பின், மாணவர்கள், தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்து, கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் உள்ளிட்ட முக்கிய பாட விடைத்தாள் நகல்களை பெற முடியும். மறுமதிப்பீடு, மறு கூட்டல் கோரியும் மாணவர்கள் விண்ணப்பிக்க வசதி உள்ளது.

விடைத்தாள் நகல் கேட்டு ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்கின்றனர். பல மாணவர்கள் வாழ்க்கையின்
பொக்கிஷமாக விடைத்தாள் நகல் இருக்க வேண்டும் என்பதற்காக நகலை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். ஆனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு கூட்டல் வாய்ப்பு மட்டுமே உள்ளது.

எனவே பிளஸ் 2 மாணவர்களைப் போல் விடைத்தாள் நகல் வழங்கல் மற்றும் மறுமதிப்பீடு போன்ற வாய்ப்பையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தேர்வுத் துறை வட்டாரம் கூறுகையில், "அரசு உத்தரவிட்டால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்க முடியும். இதில் எந்த பிரச்னையும் இல்லை" என தெரிவித்தது.

Advertisement

வாசகர் கருத்து

இது மிக நல்ல திட்டம். இதை மகிழ்ச்சி உடன் வரவேற்கிறோம்.
by Nazeera,India    2014-04-20 20:16:02 20:16:02 IST
நன்று
by kaliyaperumalg,India    2014-04-19 20:15:08 20:15:08 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us