குரூப் - 4 கலந்தாய்வுக்கு 6,000 பேருக்கு அழைப்பு | Kalvimalar - News

குரூப் - 4 கலந்தாய்வுக்கு 6,000 பேருக்கு அழைப்புஏப்ரல் 18,2014,14:30 IST

எழுத்தின் அளவு :

சென்னை: குரூப் - 4 கலந்தாய்வுக்கு 6,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 3,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்படவுள்ளன.

தமிழ்நாடு தேர்வாணையத்தின் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட பணியிடங்களில் 3,288 பேரை நியமிக்க கடந்த 1ம் தேதி முதல் டி.என்.பி.எஸ்.சி.யில் கலந்தாய்வு நடந்து வருகிறது.

இதற்கு 6,000 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மே 8ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கும். தகுதி வாய்ந்தவர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

இதன் விவரங்களை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்க்கலாம். இவ்வாறு தேர்வாணையம் அறிவித்து உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள், நீண்ட இழுபறிக்கு பின்னர், 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்வை, மொத்தம் 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருந்தனர். குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் அது தேர்ச்சி மதிப்பெண்களாக கருதப்படும்.

Advertisement

வாசகர் கருத்து

குரூப் 4 க்கு முன்னாடி நடந்த குரூப் 3 எக்ஸாம், கோ-ஆப்டெக்ஸ் எக்ஸாம், சைவம்-வைணவம் எக்ஸாம், இதுகளோட ரிசல்டும் இன்னும் வரலே. இதை பத்தி நம்ம தினமலர் செய்தி வெளியிட்டா நல்ல இருக்கும்.
by பொள்ளாச்சி சந்தானகிருஷ்ணன் ,India    2014-04-19 09:13:30 09:13:30 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us