2014, ஜுன் மாத நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா? | Kalvimalar - News

2014, ஜுன் மாத நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா?ஏப்ரல் 15,2014,14:33 IST

எழுத்தின் அளவு :

சென்னை: 2014ம் ஆண்டு ஜுன் மாத நெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இறுதி நாள் மே 5.

ஜுன் மாதம் 29ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. JRF ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான நெட் தேர்வு, ஒவ்வொரு ஆண்டும் 2 முறை தேசியளவில் நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நாடு முழுவதுமுள்ள பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய தகுதி வாய்ந்தவர்கள். மொத்தம் 79 பாடங்களில், நாடெங்கிலுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட 86 கல்வி மையங்களில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது.

இத்தேர்வை எழுத, முதுநிலைப் பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினர் 50% பெற்றாலே போதுமானது.

தேர்வு கட்டணம்

பொதுப் பிரிவினருக்கு - ரூ.450

OBC பிரிவினருக்கு - ரூ.225

SC/ST/PWD பிரிவினருக்கு - ரூ.110

விரிவான விபரங்களுக்கு http://www.ugcnetonline.in/

Advertisement

வாசகர் கருத்து

இந்தத் தேர்வு எதற்காக நடத்தப்படுகிறதோ அந்த இலக்கை எட்டுவதாகத் தெரியவில்லை. இதை முடித்தவர்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பதில்லை. தனியார் கல்லூரிகளில் இவர்களுக்கு (பெரும்பாலும்) வேலை கிடைப்பதில்லை (சம்பளம் அதிகம் தர அவர்கள் விரும்புவதில்லை). அரசாங்கமும் தனியார் கல்லூரிகளை, இந்தத் தகுதியுடையவர்களைக் கொண்டே பாடம் நடதப்படவேண்டுமென்று நிர்பந்திப்பதில்லை. UGC க்கு நல்ல வருவாயை ஈட்டித்தருவதற்கன்றி வேறெதற்கும் இந்தத்தேர்வு பயனளிப்பதில்லை.
by visualcpp,India    2014-04-15 19:57:07 19:57:07 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us