வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில், வணிகம் மற்றும் மேலாண்மை கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள், கட்டாயம் எழுத வேண்டிய தேர்வு ’ஜிமேட்’ எனும் கிராஜூவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட்!
உலகளவில் ஆண்டுதோறும் பல லட்சம் மாணவர்கள் எழுதும் இத்தேர்வினை, கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சில் (ஜிமேக்) நிர்வகித்து வருகிறது. இத்தேர்வுக்கு வயது வரம்பு மற்றும் சிறப்பு தகுதிகள் என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
புதிய நடைமுறை
தேர்வர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து, அவர்களின் தேர்வு அனுபவங்களை மேம்படுத்தும் நோக்கில், ஜூலை 11,2017 முதல் நடைபெற உள்ள ஜிமேட் தேர்வில், விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு பகுதி வரிசையை மாணவர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் ’செலக்ட் செலக்ஷன் ஆடர் ’ எனும் புதிய நடைமுறை அறிமுகமாக உள்ளது.
இதன்மூலம், நான்கு தேர்வு பகுதிகளை கொண்ட ஜிமேட் தேர்வில்,
1.அனலட்டிக்கல் ரைட்டிங், இன்டகிரேட் ரீசனிங், குவான்டிடேடிவ் மற்றும் வெர்பல்
2.வெர்பல், குவான்டிடேடிவ், இன்டகிரேட் ரீசனிங் மற்றும் அனலட்டிக்கல் ரைட்டிங்
3.குவான்டிடேடிவ், வெர்பல், இன்டகிரேட் ரீசனிங் மற்றும் அனலட்டிக்கல் ரைட்டிங், ஆகிய மூன்று வரிசைகளில் வினாத்தாள் இடம்பெறும்.
இவற்றில், மாணவர்களே அவர்களுக்கு வசதியான ஏதேனும் ஒரு முறையை தேர்ந்தெடுத்து எழுதலாம்.
மாற்றங்களின் தொடர்ச்சி...
அங்கீகார குறியீட்டு எண்ணிற்கு பதிலாக, பிறந்த தேதியை உள்ளிடு செய்து அதிகாரப்பூர்வ ‘ஜிமேட்’ தேர்வு மதிப்பெண் அறிக்கையை ஆன்லைனில் பெறுதல் மற்றும் தேர்வர் தங்களின் ஒட்டுமொத்த பகுப்பாய்வு திறன்களை அறியும் வகையில் விரிவான அறிக்கை பெறுதல் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், ஒரு முறை எழுதிய ஜிமேட் தேர்வினை ரத்து செய்த நாளில் இருந்து, மறுபடியும் தேர்வு எழுத 31 நாட்களாக இருந்த காலக்கெடு, 16 நாட்களாக குறைக்கப்பட்டு, கடந்த ஜூலை 2015ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனையடுத்து, மறுதேர்வு எழுதிய பிறகு பழைய தேர்வினை ரத்து செய்யும் முறை, கடந்த மார்ச் 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மறுதேர்வு எழுதும் வரை, பழைய தேர்வின் மதிப்பெண்களை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது ‘செலக்ட் செலக்ஷன் ஆடர்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள்: மாணவர்கள் பயன்பெறும் வகையில், நாடு முழுவதும் 20 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. தென் மாநிலங்களில், பெங்களூரு, சென்னை, கொச்சி, ஐதராபாத், மணிப்பால், மைசூர், திருச்சி, வேலூர், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா ஆகிய பகுதிகளில் தேர்வு நடைபெறும்.
விபரங்களுக்கு: