அயர்லாந்தில் கல்விமுறை எப்படி? | Kalvimalar - News

அயர்லாந்தில் கல்விமுறை எப்படி?மார்ச் 15,2018,12:00 IST

எழுத்தின் அளவு :

முற்றிலும் மாறுபட்ட கற்பிக்கும், கல்வி கற்கும் முறையைக் கொண்டுள்ள அயர்லாந்து கல்விநிறுவனங்கள், மாணவர்களின் சுய அறிவு மற்றும் திறன் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்துகின்றன!

வித்தியாசமான அணுகுமுறை: பாடபுத்தகங்களை மட்டும் படித்து, தேர்வு எழுதினால் போதும் என்ற முறை அயர்லாந்தில் இல்லை. எந்த ஒரு பாடத்தையும், மாணவர்கள் அவர்களாகவே ஆராய்ந்து, அறிந்து கற்க வேண்டும். மாணவர்களது, விருப்பத்திற்கேட்ப பாடங்களை தேர்வு செய்து, கல்வி கற்க முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. அதேநேரம், தேர்வுசெய்யப்படும் பாடப்பிரிவில் உள்ளார்ந்து கற்கும் முறை அனைத்து விதத்திலும், உறுதிசெய்யப்படுகிறது.

குறிப்பாக, இன்ஜினியரிங்படிப்புகளை எடுத்துக்கொண்டேமேயானால், அதன் பாடத்திட்டங்கள் பெரும்பாலும் செயல்முறை வடிவிலேயே அமைந்திருக்கும். சுயமாகவும், குழுவாகவும் இணைந்து சோதித்திப்பார்ந்து, அதன் அனுபவத்தில் கற்று, திறன்களை மேம்படுத்திக் கொள்ள ஊக்கமளிக்கும்.

நவீன உள்கட்டமைப்பு வசதிகள்: வெறும், ஆடம்பர மற்றும் சொகுசு உபகரணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கு பெரிதும் பயன்படுக்கூடிய தேவையான கருவிகள், தொழில்நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவை கல்வி நிறுவனங்களில் அவசியம் இடம்பெற்றிருக்கும்.

20 ஆண்டுகளுக்கு முந்தைய இன்ஜினியர்கள் சந்திந்த சவால்கள், அன்றைய தொழில்நுட்ப தாக்கங்கள் ஆகியவை, தற்போதைய பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்காது. இன்றைய சூழல்களுக்கு ஏற்ற, சவால்களுக்கு தீர்வு காணத் தூண்டும் வகையிலான பாடத்திட்டமே இடம்பெற்றிருக்கும். ஏனெனில், தற்போதைய தொழில்நுட்பம் என்பது வேறு, அன்றைய தொழில்நுட்பம் என்பது வேறு. இன்றுள்ள நவீன வளர்ச்சியில், நவீனகால இன்ஜினியர்கள், புதுவிதமான வேலைப் பளுவைக் எதிர்கொள்கின்றனர். அவற்றிற்கு, ஈடுகொடுக்கும் வகையில், மாணவர்கள் திறன் மேம்படுவதே மிக அவசியம்!

எனவே, ஒவ்வொரு மாணவரும், ஆய்வகங்களில் அதிக நேரம் செலவிட வேண்டியதிருக்கும். ஒவ்வொரு ‘அசைன்மென்ட்’ மற்றும் ஆய்வக பயிற்சியும் முக்கியத்துவம் பெறுகிறது. மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளின் அடிப்படையிலேயே, மதிப்பெண் வழங்கப்படுகிறது. வெறும் இறுதியாண்டு எழுத்தேர்வின் அடிப்படையில் மட்டுமல்ல!

பணிவாய்ப்பு: 4.3 மில்லியன் மக்கள் தொகையே கொண்ட சிறிய நாடாக இருக்கும்போதிலும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும், புதுப்புது ‘ஐடியா’க்களை வழங்கும், திறன் படைத்தவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் நாடாக திகழ்கிறது. உதாரணமாக, ஆட்டோமொபைல் துறையை எடுத்துக்கொண்டால், அயர்லாந்தில் உள்ள லாண்ட் ரோவர், ஜாகுவார் போன்ற உலகத்தரம் வாய்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகளில் திறமைசாலிகளுக்கு உரிய இடமளிக்க காத்திருக்கிறது.

அயர்லாந்தில் இளநிலை பட்டம் பெறும் சர்வதேச மாணவர்கள் ஒரு ஆண்டும், முதுநிலை பட்டம் பெறும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளும், அயர்லாந்திலேயே தங்கி, பயிற்சி அல்லது பணி பெறும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. உரிய வேலை வாய்ப்பு பெறும்பட்சத்தில், தொடர்ந்து அயர்லாந்திலேயே தங்கக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

-பஷெல் மெஷன், துணைத்தலைவர், எல்.ஐ.டி., அயர்லாந்து.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us