தங்களின் உயர்கல்வியை இங்கிலாந்தில் தொடர விரும்பும், கல்வியில் சிறந்த மாணவர்களுக்கான இருவேறு உதவித்தொகை திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
* கேட்ஸ் -கேம்பிரிட்ஜ் ஸ்காலர்ஷிப்: பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், அக்டோபர் 2000ம் ஆண்டு முதல் கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு ‘கேட்ஸ் கேம்பிரிட்ஜ் ஸ்காலர்ஷிப்’ வழங்கப்படுகிறது. இதன்மூலம், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பை பெற முடியும்.
படிப்புகள்: பிஎச்.டி., எம்.எஸ்சி., எம்.லிட்., எம்.பில்., எல்.எல்.எம்., எம்.பி.ஏ., மற்றும் டிப்ளமோ படிப்புகள்.
தகுதிகள்: விண்ணப்பிக்கும் படிப்புகளுக்கு ஏற்ற துறையில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரியில் முழு நேரக் கல்வி முறையில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் மேற்படிப்புகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை: பட்டப்படிப்புகளுக்கு ஏற்ற கல்வி கட்டணம், போக்குவரத்து கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கு, ஒரு ஆண்டுக்கு தோராயமாக ரூபாய் 12 லட்சத்து 55 ஆயிரம்.
சேர்க்கை முறை: விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தெரிவு, செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 6
மேலும் விவரங்களுக்கு:
* சேவெனிங் ஸ்காலர்ஷிப்: இங்கிலாந்தில் செயல்படும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஒரு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புக்கு, சேவெனிங் ஸ்காலர்ஷிப் உதவித்தொகை திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்: விண்ணப்பிக்கும் படிப்புகளுக்கு ஏற்ற துறையில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரியில் முழு நேரக் கல்வி முறையில் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டோபல், ஐ.இ.எல்.டி.எஸ், சி.இ.ஏ.,(கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் அட்வான்ஸ்) போன்ற ஏதேனும் ஒரு ஆங்கில மொழி புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம்.
சேர்க்கை முறை: மாணவர்கள் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 8
மேலும் விவரங்களுக்கு: