பொருளாதாரத்தில் பின்தங்கிய, கல்வியில் சிறந்த சர்வதேச மாணவர்கள், ஆஸ்திரேலியாவுக்கு சென்று, தங்களது உயர்கல்வியை தொடர வழிவகுத்துத் தருகிறது, ‘எண்டேவர் ஸ்காலர்ஷிப் அண்ட் பெல்லோஷிப்’ எனும் உதவித்தொகை திட்டம்!
கள ஆய்வு முறையில், கல்வியை கற்பிக்கும் ஆஸ்திரேலியா பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள், மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையில், தனித்திறமையை வளர்த்து கொள்ளவும் உதவுகிறது.
படிப்புகள்: இரண்டு ஆண்டுகள் கொண்ட முதுநிலை படிப்பு மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட ஆராய்ச்சி படிப்பை, ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் மாணவர்கள், இந்த உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலா
உதவித்தொகை: போக்குவரத்து கட்டணம், மாதாந்திர செலவுகள், கல்விகட்டணம் உட்பட முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 69 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்; ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 1 கோடியே 35 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்.
குறுகிய கால படிப்புகள்: நான்கு முதல் 6 மாதங்கள் கொண்ட குறுகிய கால முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பை, படிக்க விரும்பும் மாணவர்கள், ‘எண்டேவர் ரீசர்ச் பெலோஷிப்’ உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, போக்குவரத்து கட்டணம், மாதாந்திர ஊதியம், கல்வி கட்டணம் உட்பட, மொத்தம் 12 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்: படிப்புக்கு ஏற்றவாறு அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஐ.இ.எல்.டி.ஸ்., அல்லது டோபல் போன்ற மொழிப் புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30
மேலும் விவரங்களுக்கு: