இந்தியா போன்று வளர்ந்து வரும் காமன்வெல்த் நாடுகளில் உள்ள சிறந்த மாணவர்களுக்கு, நியூசிலாந்து அரசாங்கம் சி.எஸ்.எப்.பி.,யுடன் இணைந்து, அந்நாட்டில் படிக்க கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
ஆசிய கண்டத்தை சேர்ந்த மாணவர்கள், முதுநிலை அல்லது ஆராய்ச்சி(பிஎச்.டி.,) பட்டப்படிப்பை நியூசிலாந்து பல்கலைக்கழகங்களில் தொடர, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கால அளவு
முதுநிலை பட்டப்படிப்பிற்கு 2 ஆண்டுகள் வரையிலும், பிஎச்.டி., படிப்பிற்கு 3.5 ஆண்டுகள் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
துறைகள்
அக்ரிகல்ச்சர் டெவலப்மென்ட், ரினீவபில் எனர்ஜி, டிசாஸ்டர் ரிஸ்க் மேனேஜ்மென்ட், பப்ளிக் செக்டார் மேனேஜ்மென்ட், பிரைவேட் செக்டார் மேனேஜ்மென்ட் மற்றும் இங்கிலீஷ் லேங்குவேஜ் டீச்சிங்.
தகுதிகள்
முதுநிலை பட்டப்படிப்புக்கு இளநிலை பட்டப்படிப்பிலும், ஆராய்ச்சி படிப்புக்கு முதுநிலை பட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ‘டோபல்’ அல்லது ’ஐ.இ.எல்.டி.எஸ்’ மொழிப்புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வியில் சிறந்த விளங்கும் மாணவர்களுக்கும், தலைமைப் பண்புகள் உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
உதவித்தொகை வழங்கும் பல்கலைக்கழகங்கள்
ஆக்லாந்து பல்கலைக்கழகம், ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மாஸே பல்கலைக்கழகம், விக்டோரியா யூனிவர்சிட்டி ஆப் வெலிங்டன், கேன்டர்பரி பல்கலைக்கழகம், லிங்கன் பல்கலைக்கழகம் மற்றும் ஒடாகோ பல்கலைக்கழகம்.
மேலும் விவரங்களுக்கு: