சென்னை: முன்னணியில் உள்ள, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, இப்போதே மும்முரமாக நடந்து வருகிறது. கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, மே மாதம் தான், சேர்க்கைப் பணிகளை துவங்க வேண்டும்.
தமிழகத்தில், 4,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், முன்னணியில் உள்ள, 100க்கும் அதிகமான மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், 2013-14ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, இப்போதே, மும்முரமாக நடந்து வருகிறது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில், மே மாதம் தான், மாணவர் சேர்க்கைப் பணிகளை துவங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி, மாநிலம் முழுவதும், மெட்ரிக் பள்ளி அதிகாரிகள், விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டனர்.
government கூட கறக்கத்தான் கட்டுப்பாடு விதிக்குது ,
|
by ராஜா,India 12/19/2012 2:51:57 PM IST |
அரசாங்க பள்ளிகள் மற்றும் அரசாங்க உதவி பெரும் பள்ளிகளில் சேர்க்காமல் ஏன் போகவேண்டும் இங்கேயும் tuition வைத்து அதற்கும் பணம்
|
by raam,United States 12/5/2012 2:10:52 AM IST |
அரசாங்க பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆவன செய்யுங்கள், அதை விட்டு தன் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு சில பிரைவேட் ஸ்கூல் உண்டு அதனால் பெற்றோர்கள் இப்படி செய்கிறார்கள், இதில் இருவருக்கும் லாபம் இல்லாமல் இல்லை
|
by bal,France 12/4/2012 3:55:42 PM IST |
பெற்றோர்கள் யாரும் எழுத்து மூலமாக புகார் தரமாட்டார்கள். காரணம் விஷயம் தெரிந்தால் பள்ளி நிர்வாகம் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தில் விளையாடி விடுவார்கள் என்ற பயம்தான். இதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் பள்ளி நிர்வாகம் எதற்கும் பயப்படாமல் இப்படியெல்லாம் செய்கிறார்கள். வாங்குகிற தொகைக்கு எந்தப் பள்ளி நிர்வாகம் ரசீது கொடுக்கிறது? கொடுத்தால் தங்கள் குட்டு வெளியாகிவிடுமே என்ற பயத்தால்தான். இதை அரசால் ஒன்றும் செய்ய முடியாது.
"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்கவேண்டிய கூட்டம் (சும்மா) பார்த்துக்கொண்டே இருக்கிறது". காரணம் அரசுக்கே தெரியும்..
|
by Robinson,India 12/4/2012 3:06:47 PM IST |