அண்ணா பல்கலைக்கு சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம் | Kalvimalar - News

அண்ணா பல்கலைக்கு சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம்டிசம்பர் 03,2012,14:01 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் தலைமையில், 11 பேரை, சிண்டிகேட் உறுப்பினர்களாக, தமிழக அரசு நியமித்துள்ளது. இதில், வேலம்மாள் கல்வி குழுமத்தின் தலைவர் முத்துராமலிங்கம், மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரி நிர்வாகி, கருமுத்து கண்ணன் உட்பட பலர், இடம் பெற்றுள்ளனர்.

முந்தைய ஆட்சியில், சென்னை, அண்ணா பல்கலை, ஐந்து பல்கலைகளாக பிரிக்கப்பட்டது. இதனால், அண்ணா பல்கலைக்கு என, தனியாக, சிண்டிகேட் தேவையில்லை என, கலைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மீண்டும், ஐந்து பல்கலைகளும், சென்னை, அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மீண்டும், சிண்டிகேட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


கடந்த ஆண்டு, பொறியியல் படிப்பை முடித்த, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பட்டம் வழங்க வேண்டி உள்ளது. இதற்கு, சிண்டிகேட் ஒப்புதல் பெற வேண்டும். இதனால், சிண்டிகேட் அமைத்து, உறுப்பினர்களை நியமித்தும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


பல்கலையின் பொறுப்பு துணைவேந்தராக இருக்கும் காளிராஜ், சிண்டிகேட் தலைவராக இருப்பார். அரசு தரப்பில், 11 பேர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், கல்வி நிறுவனங்களை நடத்தும், முத்துராமலிங்கம், கருமுத்து கண்ணன் உட்பட, பலர் இடம்பெற்றுள்ளனர். 


இவர்களுடன், துணைவேந்தர் தரப்பில், இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஓரிரு நாளில், மேலும், இரண்டு உறுப்பினர்களை, துணைவேந்தர் நியமிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம், 20ம் தேதிக்குப் பின், சிண்டிகேட் கூட்டம் கூடி, மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்க உள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us