சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு, இன்று வருகை தரும் 85 மாணவர்களுக்கு, அட்மிஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.
சிவகங்கையில், புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டில், 85 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான ஒரிஜினல் சான்றிழ் சரிபார்த்து ஒப்படைத்தல், "அட்மிஷன்&' கார்டு வழங்குதல் போன்ற பணிகள், இன்று நடக்கின்றன.
டீன் முனியப்பன் கூறுகையில், 85 மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து, அட்மிஷன் கார்டு வழங்க, டாக்டர்கள் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ., சிவகங்கை கிளையின் ஒரு பிரிவினர், இங்கு தயார் நிலையில் வைக்கப்படுவர். இவர்களிடம், கல்வி, விடுதிக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தி விடலாம் என்றார்.