டி.இ.டி., தேர்வால் தகுதியான ஆசிரியர் கிடைப்பது நிச்சயம்: டி.ஆர்.பி., | Kalvimalar - News

டி.இ.டி., தேர்வால் தகுதியான ஆசிரியர் கிடைப்பது நிச்சயம்: டி.ஆர்.பி.,ஜூலை 14,2012,09:31 IST

எழுத்தின் அளவு :

டி.இ.டி., தேர்வு எழுதியவர்களில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என எதிர்பார்ப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

டி..டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. 6.56 லட்சம் பேர், இத்தேர்வை எழுதினர். இரு தாள் தேர்வுகளுமே கடினமாக இருந்ததாகவும், நேரமின்மை பெரிய பிரச்னையாக இருந்தது எனவும், தேர்வர் புகாராகத்தெரிவித்தனர்.

டி..டி., தேர்வு கேள்வித்தாள், தமிழகம் மட்டுமல்லாமல், ஏற்கனவே தேர்வு நடந்த கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், கடினமாகவே அமைந்துள்ளது.சி.பி.எஸ்.., தேசிய அளவில் நடத்திய தகுதித் தேர்வில், தேர்ச்சி சராசரி வெறும் 6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டி.ஆர்.பி., நடத்திய தேர்வு, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

"திறமையானவர் கிடைப்பார்'': இதுகுறித்து, டி.ஆர்.பி.,வட்டாரம் கூறியதாவது: கேள்வித்தாள் அமைக்கும் பணியில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த பாட வல்லுனர்களும் இடம் பெற்றனர். என்.சி.டி.இ., கூறியுள்ள விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் தான், கேள்வித்தாள் தயாரிக்கப் பட்டன. டி.இ.டி., தேர்வில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றாலே, அது பெரிய விஷயம். இந்த 10 சதவீதம் பேரும், நல்ல திறமை உள்ளவர்களாக இருப்பர் என்பதுமட்டும் உறுதி.

"கீ-ஆன்சர்'' எப்போது?மாவட்டங்களில் இருந்து, விடைத்தாள்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை, "ஸ்கேன்'' செய்து, அதன்பின் மதிப்பீட்டு பணிகளை செய்ய வேண்டும். இரு வாரங்களில், இணையதளத்தில், "கீ-ஆன்சர்'' வெளியிடப் படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பத்து சதவீத தேர்ச்சி எனில், 65,600 பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர். டி.ஆர்.பி., இப்படி தெரிவித்தாலும், 5 சதவீதம் வரை தான் தேர்ச்சி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வராதவர்கள் எண்ணிக்கை :முதல் தாள் தேர்வு எழுதியவர்களில், 7 சதவீதம் பேரும், இரண்டாம் தாள் எழுதியவர்களில், 8 சதவீதம் பேரும்,"ஆப்சென்ட்'' ஆனதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அதன்படி, முதல் தாள் தேர்வில், 17,287 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 28,054 பேரும், "ஆப்சென்ட்'' ஆகி உள்ளனர்.


வாசகர் கருத்து

TRB முதல்தாள் தேர்விற்கு 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை என முதலில் சிலபஸ் கொடுத்து விட்டு, 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள கேட்கப்பட்டு உள்ளது. இது TRP இன் மிக பெரிய மோசடி. இது ஏமாற்று வேலை. ஒரு முறையான தேர்வு அறிவித்து, அதை சரியாக நடத்த தெரியாத TRB எதற்கு? இடைநிலை ஆசிரியருக்கு படித்தவர்கள் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை படித்து விட்டு தேர்விற்கு போன பலபேர் கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர். சரி. இப்போ தகுதி தேர்வில் பாஸ் ஆனா ஒருத்தர் வேலை பார்கும்போது ஏதாவது தப்பு செஞ்ச அவர மணிச்சு விட்டுருவிங்களா? B .Ed தமிழ் முடித்த ஒருத்தருக்கு அதுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் இதுல்லாம் இருந்து கேள்வி கேட்ட அவரால் எப்படி தேர்வு எழுத முடியும்? இப்படி ஒரு கேவலமான தேர்வ பாக்கவே முடியாது. முதல தேர்வு நடத்துறவங்களுக்கு ஒரு தகுதி தேர்வு நடத்துன சரியாய் போகும். ஆமா, தகுதி தேர்வில பெயில் ஆய்டா, அந்த பெயில் ஆனா ஆசிரியைகளை உருவாக்கிய ஆசிரிய பயிற்சி நிறுவனங்களா TRB என்ன செய்யும்? இல்ல தேசிய கல்விக்கான கவுன்சில் என்ன செய்யும்? ஆகா மொத்தம், வேலைக்கு காத்திருந்த ஆசிரியர்கள் இந்த தகுதி தேர்வின் மூலம் ஆடு, மாடு மேய்க்க போவது உறுதி?
by ராஜா,India    7/17/2012 10:10:03 PM IST
TRB முதல்தாள் தேர்விற்கு 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை என முதலில் சிலபஸ் கொடுத்து விட்டு, 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கேட்கப்பட்டு உள்ளது. இது TRP இன் மிக பெரிய மோசடி. இது ஏமாற்று வேலை. ஒரு முறையான தேர்வு அறிவித்து, அதை சரியாக நடத்த தெரியாத TRB எதற்கு? இடைநிலை ஆசிரியருக்கு படித்தவர்கள் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை படித்து விட்டு தேர்விற்கு போன பலபேர் கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர். சரி. இப்போ தகுதி தேர்வில் பாஸ் ஆனா ஒருத்தர் வேலை பார்கும்போது ஏதாவது தப்பு செஞ்ச அவர மணிச்சு விட்டுருவிங்களா? ஏனா அவர் தகுதி தேர்வில் பாஸ் ஆனதுனால அவர மணிச்சு விட்ரனும். இத TRB உறுதி செயும? B .Ed தமிழ் முடித்த ஒருத்தருக்கு அதுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் இதுல்லாம் இருந்து கேள்வி கேட்ட அவரால் எப்படி தேர்வு எழுத முடியும்? இப்படி ஒரு கேவலமான தேர்வ பாக்கவே முடியாது. முதல தேர்வு நடத்துறவங்களுக்கு ஒரு தகுதி தேர்வு நடத்துன சரியாய் போகும். ஆமா, தகுதி தேர்வில பெயில் ஆய்டா, அந்த பெயில் ஆனா ஆசிரியைகளை உருவாக்கிய ஆசிரிய பயிற்சி நிறுவனங்களா TRB என்ன செயும்? இல்ல தேசிய கல்விக்கான கவுன்சில் என்ன செயும்? ஆகா மொத்தம், வேலைக்க காத்திருந்த ஆசிரியர்கள் இந்த தகுதி தேர்வின் மூலம் ஆடு, மாடு மேய்க்க போவது உறுதி?
by ராஜா,India    7/17/2012 10:02:34 PM IST
7 சதவீதம் பாஸ் செய்த மாணவர்கள் திறமைசாலிகள் என்றால் மற்றவர் எல்லாம் என்ன முட்டாள்களா?
by உமா,India    7/17/2012 11:04:49 AM IST
makkalidam panathai parikka ippatium oru vazhi
by raja,India    7/16/2012 7:59:16 PM IST
அது எப்படி நீங்க சொல்லலாம்? பாஸ் ஆகப்போகிற 7 சதவீதம் மாணவர்கள் மட்டுமே திறமைசாலிகள் என்று சொல்ல முடியும். மற்றவர்கள் என்ன முட்டாள்களா?
by பாலு உமா,India    7/16/2012 6:15:44 PM IST
இதே தலையங்கத்தை எத்தனை நாட்களுக்குத்தான் வைத்துக் கொண்டிருப்பீர்கள்....அப்படியானால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தகுதியற்றவர்களா....
by ந.காளிராஜ் ,India    7/16/2012 5:40:58 PM IST
ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவு வெளியிடபட்டால் அதன் விளைவு பல ஆசிரியர்களின் வாழ்கையை கேள்விக்குறியாக்கிவிடும். மேலும் இத்தேர்வின் முடிவால் ஆசிரியர் சமுதாயத்தின் வளர்ச்சி சீர்குலைய வாய்ப்பு உள்ளது . இத்தேர்வின் முடிவு தமிழ்நாடு ஆசரியர் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அவமானத்தை தருமாயானால் அது ஆசிரியர் தேர்வு வாரியத்தை சாரும். எனவே இதை கருத்தில் கொண்டு இத்தேர்வினை ரத்து செய்து பின் வரும் விளைவுகளிலிருந்து தமிழ்நாடு ஆசரியர் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும்.
by மகாராஜன்,India    7/16/2012 2:56:26 PM IST
டி ஆர் பி வேஸ்ட் எக்ஸாம் டைம் இல்ல, ரொம்ப கஷ்ட பட்டு கோசிங் கிளாஸ் போனேன். ஆனா எக்ஸாம் சரியா எழுதல. லக் இருந்தா பாஸ் ரொம்ப கனவோடு இருந்தேன். ஆனா இவ்வளவு கஷ்டமா கேள்வி கேட்க கூடாது.
by udhayasuriyan,India    7/16/2012 11:37:35 AM IST
அதாவது......தமிழகத்தில் பல பேராசிரியர்கள் இந்த தேர்விற்கு வழிகாட்டி நூலை வெளியிட்டார்கள்,பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள்.... அவற்றிலிருந்து ஒரு சதவிகிதம் கூட கேள்விகள் கேட்கப்படவில்லை....இவர்களெல்லாம் தகுதிவாய்ந்த ஆசிரியர்களா..இல்லையா....?
by ந.காளிராஜ் ,India    7/15/2012 3:14:57 PM IST
தகுதியான ஆசிரியர் kidaikkiraangalo இல்லையோ உங்களுக்கு பணம் நல்லா கிடைக்கும் இல்ல.
by Ravindran,Saudi Arabia    7/15/2012 9:28:42 AM IST
இப்படியெல்லாம் வாட்டி வதைப்பதற்குபதில் ஆசிரியர் பயிற்சிக்கு அனுமதிக்கும்போதே தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும்.ஆட்சியில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டியது. பிறகு சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக தேவையற்ற சட்டங்களை இயற்றவேண்டியது.இவையெல்லாம் நல்ல அறிவு உள்ளவர்கள் செய்யும் காரியம் இல்லை.இவர்களை ஆதரித்து பக்கம் பக்கமாக கருத்து எழுதும் பெரிய தலையை உடையவர்களை நான் வெறுக்கிறேன்.நன்றி
by பொய்யன் ,Qatar    7/15/2012 1:10:28 AM IST
தமிழ் நாடுக்கு நல்ல தகுதியான ஆசிரியர் கிடைப்பது நிச்சயம் டி.ஆர்.பி.க்கு நன்றி
by செந்தில்குமார்,India    7/15/2012 12:46:52 AM IST
இப்போ இருக்குற ஆசியருக்கு tet எக்ஸாம் வைத்து மினிமம் 35 percentage மார்க் பாஸ் என்றாலும் யாரும் பாஸ் ஆகமாட்டார்கள்
by nithya,India    7/14/2012 2:29:08 PM IST
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட மாதிரி வினாத்தாளுக்கும் தேர்வு நடந்த வினாத்தாளுக்கும் அடிப்படை சம்பந்தம் கூட இல்லையே....தேர்வு வாரியம் எமாற்றுகின்றதா....?
by ந.காளிராஜ் ,India    7/14/2012 11:25:59 AM IST
தகுதியான ஆசிரியர்கள்....என்றால்..?பிஎச்டி ...படித்தவர்களை 6 முதல் 14 வயது வரை பயில்பவர்களுக்கு ஆசிரியர்களாக நியமிக்கலாமே...அதற்கெதற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களெல்லாம்...?
by ந.காளிராஜ் ,India    7/14/2012 10:20:45 AM IST
தேர்வு கடினம் என்பதை விட அதை முழுமையாக எழுத நேரமின்மை பெரிய குறை.முறையான நேரம் ஒதுக்கி இருக்க வேண்டும்.தகுதி உள்ள பலரும் தங்கள் திறனைக்காட்ட முடியாதவாறு செய்து விட்டனர்.
by மல்லீஸ்வரன் ,India    7/14/2012 9:56:14 AM IST
ithu dayvai ilatha onu
by selvakumar,India    7/14/2012 9:42:41 AM IST
Good luck. siva melur
by Sivam,India    7/14/2012 9:23:40 AM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us