பொறியியல் படிக்க விரும்பும் பலருக்கு, என்ன துறையைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் பெரியளவில் இருக்கும். இன்ன துறையைத்தான் படிக்க வேண்டும் என்ற தெளிவான முடிவு உங்கள் மகனுக்கு இல்லையென்றால், படிக்கும் கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். ஐ.டி மற்றும் கணிப்பொறி அறிவியல் போன்ற துறைகள் அதிகளவிலான பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கின்றன.
நான் இறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவெனில், துறையை விட கல்லூரியே முக்கியம் என்பதுதான் அது. ஏனெனில், நல்ல கல்லூரியில்தான் பல நல்ல நிறுவனங்கள் வந்து மாணவர்களை எடுத்துக் கொள்ளும். கேம்பஸ் இண்டர்வியூ இல்லாத பல கல்லூரிகளில், தாங்கள் விரும்பிய படிப்பை, ஏராளமாக செலவழித்துப் படித்த பல மாணவர்கள், இன்று தெருவில் நிற்பதை நான் பார்க்கிறேன்.